ஆப்நகரம்

வெள்ளம், பள்ளி தேர்வுகளை கருத்தில் கொண்டே தமிழக தேர்தல் தேதி முடிவு: நஜீம் ஹைதி

கடந்தாண்டு தமிழகத்தில் ஏற்பட்ட பேரு வெள்ளம் மற்றும் பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழக தேர்தல் தேதிமுடிவு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதி தெரிவித்துள்ளார்

TNN 4 Mar 2016, 7:12 pm
டெல்லி: கடந்தாண்டு தமிழகத்தில் ஏற்பட்ட பேரு வெள்ளம் மற்றும் பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழக தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn election dates were announced after taking floods and school examinations in to account says nasim zaidi
வெள்ளம், பள்ளி தேர்வுகளை கருத்தில் கொண்டே தமிழக தேர்தல் தேதி முடிவு: நஜீம் ஹைதி


தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அட்டவனையை இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதி அறிவித்தார். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவனையை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஹைதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவை அருக்கமையில் அமைந்துள்ளதால், இந்த மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்டுகிறது.

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையினர் முழு வீச்சில் தங்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர்.

கடந்தாண்டு தமிழகத்தில் ஏற்பட்ட பேரு வெள்ளம் மற்றும் பள்ளி தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தமிழக தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டது.

அசாம் மற்றும் மேற்கு வங்காளம் போல தமிழகத்தில் தேர்தல் நடத்துவது மிக சிரமமானது அல்ல" என்று நஜீம் ஹைதி தெரிவித்தார்.

அடுத்த செய்தி