ஆப்நகரம்

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

கடந்த சில மாதங்களில் மட்டும் திருநீர்மலை, அனகாபுத்தூர், குன்றத்தூர், வண்டலூர் உள்ளிட்ட ​சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து பலமுறை புகார்களும் வந்துள்ளன. ​​ இதனை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என்பதை குறிப்பிட்டு கடந்த 16 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டது.

Samayam Tamil 19 Dec 2019, 11:08 am
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியின் எதிரொலியாக, மருத்துவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய வலியுறுத்தி மாசுக் கட்டுபாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil tnpcb takes action to regulate bio wase management in chennai
டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி எதிரொலி: மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை


அனுதினமும் உருவாகும் மருத்துவக் கழிவுகளில், 75 சதவீத மருத்துவக் கழிவுகள் சென்னையின் சாலையோரப் பகுதிகளில் தான் கொட்டப்படுகின்றன. உயிர்களுக்கும், சூழலுக்கும் கேடு தரும் நச்சுத்தன்மை மிக்க இந்த கழிவுகளில் 25 சதவீதம் மட்டுமே முறையான படி மேலாண்மை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் டி.சேகர் தெரிவித்ததாவது, “பெரும் மருத்துவ நிறுவனங்கள் இதனை முறையாகச் செய்கின்றன என்றபோதும், சிறிய சிறிய கிளினிக்குகள் மற்றும் சுகாதார நிலையங்கள் இந்த தவறைத் தொடர்ந்து செய்கின்றன” என்று தெரிவித்தார்.


கடந்த சில மாதங்களில் மட்டும் திருநீர்மலை, அனகாபுத்தூர், குன்றத்தூர், வண்டலூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து பலமுறை புகார்களும் வந்துள்ளன. இதனை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன் என்பதை குறிப்பிட்டு கடந்த 16 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டது.

மேலும் எவையெல்லாம் உயிர்க்கழிவுகள், அவை எப்படி மேலாண்மை செய்யபட வேண்டும் எதனடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அந்த செய்திக்கட்டுரை விளக்கியிருந்தது.


இந்நிலையில் 18 ஆம் தேதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி நகருக்கு வெளியே உயிர்மருத்துவக் கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களை கடுமையாக எச்சரித்தது. மேலும், இதுபோல கொட்டுவது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சூழலியல் இழப்பீட்டு அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளது.

கழிவுகளை ஆங்காங்கே வைத்து முறைப்படி மேலாண்மை செய்ய வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பு. மேலாண்மை செய்யப்பட்ட கழிவுகளை மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மையத்திடம் (CBMWTF - common bio medical waste management facility ) ஒப்படைக்க வேண்டும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், சென்னையின் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், உருவாகும் மருத்துவக் கழிவுகளுக்கான மேலாண்மை மையம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அங்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தபட்டது.

அடுத்த செய்தி