வரதட்சனை பெறாதவா்கள் என்னை திருமணத்திற்கு அழைக்கலாம் என்றும், அந்த திருமணத்திற்கு தான் நான் செல்வேன் என்றும் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் தொிவித்துள்ளாா்.
பீகார் முதல்வா் நிதிஷ் குமார் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று வரதட்சனை மற்றும் சிறார் திருமணத்துக்கு எதிரான பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மனித சங்கிலி நிகழ்ச்சியையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். உங்களுக்கு திருமணம் நடைபெற்றபோது நீங்கள் வரதட்சனை வாங்கவில்லையா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், 1973-ம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனபோது நான் வரதட்சனை ஏதும் வாங்கவில்லை என தெரிவித்தார்.
பாட்னா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற என் திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது பேச்சில் வரதட்சனைக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்திருந்தனர். இந்த வேளையில் இதை நினைவுப்படுத்தி கேள்வி எழுப்பிய நிருபருக்கு நன்றி என கூறிய அவர் தனது மனைவி பத்தாண்டுகளுக்கு முன்னர் காலமானதை எண்ணி வேதனைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, என்னை திருமணத்துக்கு அழைக்க விரும்புபவர்கள் வேறு எந்த வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டியதில்லை. நாங்கள் வரதட்சனை வாங்கவில்லை என மணமகன் வீட்டார் உறுதி அளித்தால் போதும்.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் பீகாாில் வரதட்சனை கொடுமை தொடர்பான 4,852 வழக்குகள் பதிவாகியுள்ளன. 987 வரதட்சனை மரணங்களும், நாட்டில் நடைபெற்ற குழந்தை திருமணங்களில் 39 சதவீதம் பீகாரில் நடைபெற்றுள்ளது எனவும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வா் நிதிஷ் குமார் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று வரதட்சனை மற்றும் சிறார் திருமணத்துக்கு எதிரான பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மனித சங்கிலி நிகழ்ச்சியையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். உங்களுக்கு திருமணம் நடைபெற்றபோது நீங்கள் வரதட்சனை வாங்கவில்லையா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், 1973-ம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனபோது நான் வரதட்சனை ஏதும் வாங்கவில்லை என தெரிவித்தார்.
பாட்னா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற என் திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது பேச்சில் வரதட்சனைக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்திருந்தனர். இந்த வேளையில் இதை நினைவுப்படுத்தி கேள்வி எழுப்பிய நிருபருக்கு நன்றி என கூறிய அவர் தனது மனைவி பத்தாண்டுகளுக்கு முன்னர் காலமானதை எண்ணி வேதனைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, என்னை திருமணத்துக்கு அழைக்க விரும்புபவர்கள் வேறு எந்த வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டியதில்லை. நாங்கள் வரதட்சனை வாங்கவில்லை என மணமகன் வீட்டார் உறுதி அளித்தால் போதும்.
கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் பீகாாில் வரதட்சனை கொடுமை தொடர்பான 4,852 வழக்குகள் பதிவாகியுள்ளன. 987 வரதட்சனை மரணங்களும், நாட்டில் நடைபெற்ற குழந்தை திருமணங்களில் 39 சதவீதம் பீகாரில் நடைபெற்றுள்ளது எனவும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.