ஆப்நகரம்

சிகரெட் அட்டையில் 85% எச்சரிக்கை படம்: உச்சநீதிமன்றம்

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டில் 85% எச்சரிக்கை படம் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Aug 2018, 1:27 am
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டில் 85% எச்சரிக்கை படம் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil india-fighting-tobacco_9e875db8-e1a8-11e7-8c02-0f57a5c79e45


கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல், சிகரெட், பீடி, போதைப் பாக்குகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டில் எச்சரிக்கை படத்திற்காக இடம் 40% என்பதிலிருந்து 85% ஆக அதிகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து புகையிலை நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்தது.

இந்நிலையில், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது.

அப்போது, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டில் 85% எச்சரிக்கை படம் இடம்பெற வேண்டும் என்பது தொடரும் என உத்தரவிடப்பட்டது.

அடுத்த செய்தி