ஆப்நகரம்

சட்டீஸ்கர் தேர்தல்; முதல்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

ராய்பூர்: முதல்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Samayam Tamil 23 Oct 2018, 1:49 pm
சட்டீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது.
Samayam Tamil Election-Commission-of-India


இதையடுத்து விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, வரும் நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மாவோயிஸ்ட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பஸ்டார் பகுதியின் 7 மாவட்டங்களின் 12 தொகுதிகள், ராஜ்நந்த்கோன் மாவட்டத்தின் 6 தொகுதிகள் அடங்கும்.

மொத்தம் 31 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்கள் திரும்பப் பெற வரும் 26ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today is the last day for filing nominations for 1st phase of Chhattisgarh polls.

அடுத்த செய்தி