மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கண்டனப் போராட்டம் நடத்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடி செய்ததாக ரோஸ் வேலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. நிதி நிறுவன மோசடி வழக்குகளின் கீழ் வரும் வழக்குகளில் ஒன்றாக இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ரோஸ் வேலி ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாயை சிபிஐ கைது செய்துள்ளது. அவரிடம், தீவிர விசாரணை நடைபெறுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, ரோஸ் வேலி ஊழல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. தபஸ் பாலை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில், இரண்டாவதாக சுதீப் கைது செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, பணத்தட்டுப்பாடு விவகாரத்தில் நாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடக்கும் வகையில் பழிவாங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சுதீப் கைது தொடர்பாக, நாளை (ஜன.,03) கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாகக் கண்டனப் போராட்டம் நடத்தவும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இது மட்டுமின்றி, பணத் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, ஜனவரி 9ம் தேதி முதலாக, நாடு தழுவிய மிகப்பெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும், மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
‘’Tomorrow will protest in Kolkata over arrest of TMC MP Sudip Bandhopadhyay. On 9 Jan protest to start in 10 states on #DeMonetisation,’’- West Bengal Chief Minister Mamata Banerjee.
ஆயிரக்கணக்கான மூதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு அதிகமாக மோசடி செய்ததாக ரோஸ் வேலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. நிதி நிறுவன மோசடி வழக்குகளின் கீழ் வரும் வழக்குகளில் ஒன்றாக இந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ரோஸ் வேலி ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் பந்த்யோபத்யாயை சிபிஐ கைது செய்துள்ளது. அவரிடம், தீவிர விசாரணை நடைபெறுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, ரோஸ் வேலி ஊழல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. தபஸ் பாலை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில், இரண்டாவதாக சுதீப் கைது செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குப் பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, பணத்தட்டுப்பாடு விவகாரத்தில் நாங்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தை முடக்கும் வகையில் பழிவாங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சுதீப் கைது தொடர்பாக, நாளை (ஜன.,03) கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாகக் கண்டனப் போராட்டம் நடத்தவும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இது மட்டுமின்றி, பணத் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, ஜனவரி 9ம் தேதி முதலாக, நாடு தழுவிய மிகப்பெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும், மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
‘’Tomorrow will protest in Kolkata over arrest of TMC MP Sudip Bandhopadhyay. On 9 Jan protest to start in 10 states on #DeMonetisation,’’- West Bengal Chief Minister Mamata Banerjee.