பிஹார் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு
பிஹார் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 72 போ் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் அனிருத் குமார் கூறியுள்ளார்
பிஹார் கனமழையால் 25 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏராளமான உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீ்ட்பு படையினர் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி இதுவரை 72 போ் உயிரிழந்துள்ளதாக பிஹார் பேரிடர் நிர்வாகத் துறையின் கூடுதல் செயலர் அனிருத் குமார் கூறியுள்ளார்
மீட்பு பணிகளில் ராணுவ படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் படகில் சென்றும், விமானத்தில் சென்றும் மக்களை மீட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.