ஆப்நகரம்

ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

வனவிலங்கு சரணாலயங்களை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு மகாராஷ்டிராவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Sep 2020, 6:46 am
கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கம் ஆறு மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது.
Samayam Tamil mumbai national park


பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாத இறுதியிலும் மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி தளர்வுகள் அறிவிக்கின்றன.

அந்தவகையில் மாதக் கடைசியான தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் மகாரஷ்டிராவிலும் சில தளர்வு அறிவிப்புகள் வெளியாகின்றன.

பள்ளிகள் திறக்கப்படாது: தமிழக அரசின் முடிவில் மாற்றம்!

மஹாவில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மார்ச் 25ஆம் தேதி முதல் மகாரஷ்டிராவில் அனைத்து வனவிலங்கு சரணாலயங்களும் மூடப்பட்டன. சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர்.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரம் காலையில் நடைப்பயிற்சிக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படவுள்ளனர்.

பாஜக சட்டங்களை டம்மி பண்ண சூப்பர் ஐடியா; போட்டுக் கொடுத்த சோனியா!

இதனிடையே டடோபா அந்தேரி புலிகள் காப்பகம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து வன விலங்கு சரணாலயங்களும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என வனத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி