ஆப்நகரம்

ரசாயன கழிவுகள் கலப்பு: நுரையுடன் பாயும் யமுனை ஆறு

அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லியில் காற்றைப் போல் நீரும் நஞ்சாகி விடும் அபாயம் உருவாகியுள்ளது

Samayam Tamil 7 Nov 2019, 2:39 pm
டெல்லி: காற்று மாசுவால் டெல்லியில் மக்கள் ஏற்கெனவே அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ரசாயன ஆலைக் கழிவுகள் கலப்பால் யமுனை ஆறு கடுமையாக மாசடைந்து வருகிறது.
Samayam Tamil வழிபாடு நடத்தும் பெண்கள்
வழிபாடு நடத்தும் பெண்கள்


தலைநகர் டெல்லியில் அளவுக்கு அதிகமான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலையான 2.5 மாசுத்துகளை தாண்டி 800 புள்ளிகள் வரை சென்றுள்ளதால் நிலைமை மோசமாகியுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள், பழைய கட்டடங்கள் இடிப்பு உள்ளிட்டவைகள் காற்று மாசுவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

டெல்லி காற்று மாசு...பாகிஸ்தான், சீனா காரணம்; பாஜக தலைவர் வினோதம்

காற்று மாசுவால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், ரசாயனக் கழிவு கலப்பு காரணமாக டெல்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக யமுனை ஆற்றில் மலை போல் நுரை பொங்கி எழுகிறது. ஆனால், இதனை பொருட்படுத்தாமல், மக்கள் ஆற்றில் இறங்கி வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகி சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூச்சு முட்டும் டெல்லி- அமலுக்கு வந்த ஒற்றை, இரட்டை எண்கள் முறையிலான வாகன அனுமதி!

டெல்லி அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் காற்றைப் போல் நீரும் நஞ்சாகி விடும் அபாயம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி