ஆப்நகரம்

உஷார் வாகன ஓட்டிகளே... அதிகரிக்கும் சாலை விதிமீறல்கள் - மிகக் கடுமையான தண்டனைகள்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் மூலம், போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 1 Aug 2019, 2:25 pm
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளது. இதையடுத்து நிறைவேறாத ஏராளமான மசோதாக்களை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி வருகின்றது. மக்களவையில் அதிக பெரும்பான்மை இருப்பதால், மசோதாக்கள் எளிதில் நிறைவேறி விடுகின்றன. ஆனால் மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால், மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
Samayam Tamil Traffic Violation


ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி பாஜக அரசு சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவும் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.

Also Read: புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சனை? மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பிக்கள் ஆலோசனை!

மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 103 பேரும், எதிராக 13 பேரும் வாக்களித்தனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தம் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

* லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.500)

* ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.100)

* சீட்பெல்ட் அணியாமல் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.100)

Also Read: எதிர்ப்பதுபோல எதிர்த்துவிட்டு என்.ஐ.ஏ-வை ஆதரித்த திமுக; முத்தலாக்குக்கு ஆதரவளித்த அதிமுக

* அதிக வேகத்துடன் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.1000(முன்பு - ரூ.400)

* செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.1000)

* மிக மிக வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.5000(முன்பு - ரூ.1000)

* மதுபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் ரூ.10,000(முன்பு - ரூ.2000)

* ஆம்புலன்ஸுக்கு வழிவிடா விட்டால் அபராதம் ரூ.10,000. இதற்கு முன்பு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.

Also Read: பலத்த எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது முத்தலாக் தடைச் சட்டம்!

அடுத்த செய்தி