ஆப்நகரம்

டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் பிரச்சனையை தீர்க்க டிராய் முடிவு!

டிஜிட்டல் செட்டாப் பாக்ஸுக்கு பொதுமக்களிடம் அதிகபணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 20 Jan 2018, 1:40 am
திருச்சி: டிஜிட்டல் செட்டாப் பாக்ஸுக்கு பொதுமக்களிடம் அதிகபணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil trai to look into digital set top box price issue
டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் பிரச்சனையை தீர்க்க டிராய் முடிவு!


தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆர்எஸ் சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் நான்காம் கட்ட பணிகள் தற்போது முடிந்துவிட்டன.

இந்தியாவிலேயே தமிழகத்தில் செட் டாப் பாக்ஸுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில், இந்தப் பிரச்சனைகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காண்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி