ஆப்நகரம்

எஞ்சின் இல்லாமல் 3 மணி நேரம் பயணிகளுடன் ரயில் பெட்டிகள் 10 கி.மீ சென்றதால் பயங்கரம்

ஒடிசா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் தானாக பின்னோக்கி 10 ரயில் பெட்டிகள் சென்றதால் பயணிகள் உயிர் பயத்தில் தவித்தனர்.

Samayam Tamil 8 Apr 2018, 3:03 pm
ஒடிசா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் தானாக பின்னோக்கி 10 ரயில் பெட்டிகள் சென்றதால் பயணிகள் உயிர் பயத்தில் தவித்தனர்.
Samayam Tamil train

குஜராத் மாநிலம் அகமதாபத்துக்கும் - ஒடிசா மாநிலம் பூரிக்கும் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. நேற்று இரவு இந்த ரயில் திட்லாகர் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. பின்னர் அதோடு மேலும் சில பெட்டிகள் இணைக்க எஞ்சின் அகற்றப்பட்டது.

இந்நிலையில் திடீரென 10க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் மட்டும் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. இதைப்பார்த்து ரயிலை நிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் உறைந்தனர்.

எஞ்சின்கள் இல்லாமல் ரயில் பெட்டிகள் மட்டும் செல்வதை கண்டு ரயில் பெட்டியில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
ரயில்வே ஊழியர்கள் எஞ்சின் இல்லாத ரயில் செல்லும் தண்டவாளத்தில் வேறு எந்த ரயிலும் வராமல் வேறு பாதைக்கு மாற்றிவிட்டனர்.
பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம், 15 கி.மீ துரம் சென்று ரயில் பெட்டிகள் தானாக நின்றதால் விலகியது.
பின்னர் மாற்று ரயில் எஞ்சின் கொண்டு அந்த ரயில் பெட்டிகள் மீண்டும் திட்லாகர் கொண்டு சென்றனர்.

அடுத்த செய்தி