ஆப்நகரம்

நீதிபதி நாற்காலியில் அமர்ந்து செல்ஃபி எடுத்தவர் மீது வழக்கு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த போலீஸ் பயிற்சி பெறும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jul 2018, 5:54 pm
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த போலீஸ் பயிற்சி பெறும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 1530513631-selfie_new_1


மத்தியப் பிரதேச மாநிலத்தின் உமாரியாவில் உள்ள நீதிமன்றத்தில் நீதிமன்ற அலுவல்கள் முடிந்த பிறகு, நீதிபதியின் நாற்காலியில் அமர்ந்து ஒரு இளைஞர் செல்ஃபி எடுத்திருக்கிறார்.

இதைப் பார்த்த நீதிமன்ற அதிகாரி ஒருவர் அவரைக் கண்டித்திருக்கிறார். அதற்கு அந்த இளைஞர். “உங்களால் முடிந்ததை செய்துகொள்ளுங்கள். நான் போலீஸ்” என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த அதிகாரி போலீசாரிடம் அந்த இளைஞர் மீது புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் பெயர் ராம் அவ்தார் ராவத் என்றும் அவர் போலீஸ் கான்ஸ்டபிள் பயிற்சி பெறுபவர் என்றும் தெரிந்துள்ளது.

தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி