ஆப்நகரம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இன்ஜின் இல்லா ரயில் சோதனை ஒட்டம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அதிவேக ரயிலான ’ரயில் 18’-ன் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 26 Nov 2018, 3:59 pm
Samayam Tamil go
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அதிவேக ரயிலான ’ரயில் 18’-ன் சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

மேக் இன் இந்தியாவின் கீழ்உருவாக்கப்பட்டஅதிவேக ரயில்தான் ’ரயில் 18’.இந்த ரயில் இன்ஜின் இல்லாமல் செயல்படுவதால் சுற்றுசூழலுக்கு நன்மை தரும். இதுதொடர்பாக ஆர்டிஎஸ்ஒ (Research Design and Standards Organisation)அதிகாரி கூறியதாவது ‘ரயில் 18சோதனை ஓட்டம்உத்திர பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் ரயில் பாதையில்நடைபெற்று வருகிறது. ரயில் வேகம் தொடர்பான சோதனைகள் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரத்தில் நடைபெறுகிறது‘’ என்று தெரிவித்தார்.

இந்த ரயிலானது சென்னை ஐசிஎப்-யில் ரூ 100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இது ஏசி வசதிகொண்ட ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் 15 சதவிகிதம் பயண நேரத்தை குறைக்கும் என்று சென்னை ஐசிஎப் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி