ஆப்நகரம்

திருப்பதி மலையில் ஷாக்; சிக்கலில் மாட்டிக் கொண்ட பக்தர்கள்!

திருமலையில் புரட்டி எடுத்த கனமழையைத் தொடர்ந்து நிகழ்ந்த விபரீதங்களை இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Nov 2020, 8:08 am
வங்கக் கடலில் உருவான அதி தீவிர புயலான நிவர் மற்றும் அதன் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் பல்வேறு மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருமலையிலும் நிவர் புயலின் தாக்கம் இருந்தது. கடந்த 25, 26 ஆகிய இரு தினங்களாக திருமலையில் மிகக் கன மழை புரட்டி எடுத்தது. இதனால் திருமலையில் உள்ள 5 நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. இதையொட்டி பாதுகாப்பான முறையில் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil tree falling incident landslide reported at several places in tirumala
திருப்பதி மலையில் ஷாக்; சிக்கலில் மாட்டிக் கொண்ட பக்தர்கள்!


திருமலையில் முறிந்து விழுந்த மரங்கள்

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையில் கம்யூனிட்டி ஹாலின் சுவர் இடிந்து விழுந்ததால் இருசக்கர வாகனங்கள் பெரிதும் சேதமடைந்தன. திருமலையின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இவற்றை அகற்றும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழையில் நனைந்தவாறே பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க நேர்ந்தது.

திருப்பதி மலையில் நிலச்சரிவு

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் காரில் திருமலைக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென பாறைகள் சரிந்தன. அப்போது ஓட்டுநர் திறம்பட செயல்பட்டு காரை நிறுத்தினார். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காரில் இருந்த பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த நிலச்சரிவு பற்றி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


திருப்பதியில் இப்படியொரு திடீர் மாற்றம்; பக்தர்கள் உஷாரா தெரிஞ்சுக்கோங்க!

சிக்கலில் மாட்டிக் கொண்ட பக்தர்கள்

அவர் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பக்தர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் அனைவரையும் திருமலைக்கு அழைத்துச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக மலைப் பாதையில் சரிந்து விழுந்த கற்கள், பாறைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. திருப்பதியில் கனமழை காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு

சித்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக திருப்பதி நகர், எர்பேடு, சத்யவேடு, நகரி, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட நகரங்களில் பெய்த கன மழையால் சாலைகளின் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் பலரும் பாதிக்கப்படைந்தனர்.

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

நெல்லூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த பலத்த மழையால் நெல்லூர், கோவுரு, நாயுடுபேட்டை, சூலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சூழலில் குர்னூல் மாவட்டத்தின் குண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பொது விடுமுறை அறிவிப்பு

இதையொட்டி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். பிரகாசம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று (நவம்பர் 27) ஒருநாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.


உலகிலேயே ஃபர்ஸ்ட் டைம்; ஆச்சரியப்படுத்திய திருப்பதி திருமலை!

முதல்வர் அவசர ஆலோசனை

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். மீட்பு படையினரை தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்.

அடுத்த செய்தி