ஆப்நகரம்

கத்துவா வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 7 May 2018, 4:31 pm
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Supreme court


ஜம்மு காஷ்மீா் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காவல்துறை அதிகாாிகள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் செயல்படுவதாக புகாா்கள் எழுந்தன.

இந்த வழக்கு கத்துவா முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சிறுமியின் தந்தை மற்றும் சிறுமியின் வழக்கறிஞா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கு கத்துவா பகுதியில் நடைபெற்றால் உண்மை சம்பவம் வெளிக்கொண்டுவரப் படாது. எனவே இந்த வழக்கை சண்டிகா் மாநிலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஜம்மு காஷ்மீா் மாநிலம் சாா்பில் வழக்கு விசாரணைக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும். விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது என்று தெரிவித்தனா். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனா்.

மேலும் வழக்கின் விசாரணையை வீடியோ பதிவு செய்யவும், வழக்கின் விசாரணையை தினமும் மேற்கொள்ளவேண்டும். அதனை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி