ஹைதராபாத்: கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக தெலங்கானா மாநிலத்தில் நூதன முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது.
சர்வதேச நோய்த் தொற்றாக மாரியுள்ள கொரோனா வைரஸ் சுகாதார, மருத்துவ அமைப்புகளுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் மட்டும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், முகமுடி அனிந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. செல்போன் காலர் ட்யூன் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது
இதனிடையே, வருகிற 22ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, மத்திய அரசின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்ச்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்களை கூட்டம் அதிகளவில் கூடாமல் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு வாருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக தெலங்கானா மாநிலத்தில் நூதன முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியின திருமணத்தின் போது, திருமண மந்திரங்களுக்கு பதிலாக கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை பூசாரி விளக்கியது வரவேற்பை பெற்றுள்ளது.
சர்வதேச நோய்த் தொற்றாக மாரியுள்ள கொரோனா வைரஸ் சுகாதார, மருத்துவ அமைப்புகளுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹான் நகரத்தை மையமாக கொண்டு உலகம் முழுவதும் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும் நயவஞ்சக கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் மட்டும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன. கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், முகமுடி அனிந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. செல்போன் காலர் ட்யூன் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியது
இதனிடையே, வருகிற 22ஆம் தேதி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, மத்திய அரசின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்ச்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்களை கூட்டம் அதிகளவில் கூடாமல் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு வாருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக தெலங்கானா மாநிலத்தில் நூதன முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியின திருமணத்தின் போது, திருமண மந்திரங்களுக்கு பதிலாக கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகளை பூசாரி விளக்கியது வரவேற்பை பெற்றுள்ளது.