ஆப்நகரம்

திரிபுரா கலவரத்தில் இளம் பத்திரிக்கையாளர் படுகொலை.!

திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 20 Sep 2017, 8:28 pm
திரிபுரா மாநிலத்தில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tripura journalist murdered in a clash between political parties
திரிபுரா கலவரத்தில் இளம் பத்திரிக்கையாளர் படுகொலை.!


சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடைபெறும் தாக்குதல், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன், பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் கொடூரமான கொலை செய்யப்பட்டது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், அதிகாரத்திற்கு எதிராகவும் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 1992லிருந்து இன்று வரையிலும் 27 பத்திரிக்கையாளர்கள் எந்த குற்றமும் இல்லாமல் தங்கள் வேலையை நியாயமாக செய்ததற்காக கொல்லப்பட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் கூறியுள்ளது.

இந்த நிலையில் திரிபுரா மாநிலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தின், கோவாய் பகுதியில் பழங்குடி இன அமைப்புகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல், இன்று கலவரமாக வெடித்தது. இதுகுறித்த தகவல் சேகரிக்க சென்ற ’தீன் ராத்’ தொலைக்காட்சியைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுணிக், மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலவரம் மேலும், பரவாமல் தடுப்பதற்காக மேற்கு திரிபுரா மற்றும் கோவாய் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tripura Journalist murdered in a Clash Between Political Parties

அடுத்த செய்தி