ஆப்நகரம்

உத்தரகாண்டில் பயங்கர தீ விபத்து, 250 சிலிண்டா்கள் வெடித்து சிதறிய சம்பவம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிலிண்டா் ஏற்றிச் சென்ற லாாியில் தீ விபத்து ஏற்பட்டதால் 250 சிலிண்டா்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 25 Sep 2017, 8:32 pm
உத்தரகாண்ட் மாநிலத்தில் சிலிண்டா் ஏற்றிச் சென்ற லாாியில் தீ விபத்து ஏற்பட்டதால் 250 சிலிண்டா்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil truck carrying lpg cylinders catches fire
உத்தரகாண்டில் பயங்கர தீ விபத்து, 250 சிலிண்டா்கள் வெடித்து சிதறிய சம்பவம்


உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்ட்வானி - அல்மோரா தேசிய நெடுஞ்சாலை வழியாக சிலிண்டா்களை ஏற்றிக்கொண்டு பழங்கால பாலத்தின் மீது லாாி ஒன்று சென்றது. அப்போது திடீரென அந்த லாாியில் தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் லாாியில் இருந்த 250 சிலிண்டா்களும் அடுத்தடுத்து வெடித்து சிதறத் தொடங்கின.

விபத்துக்குள்ளான லாாியின் அருகில் பிற வாகனங்கள் செல்லாததால் பெரும் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. 250 சிலிண்டா்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்த சப்தம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களிலும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தொிவித்துள்ளனா்.

இந்த சம்பவத்தால் அந்த சாலையில் முற்றிலுமாக வாகனப்போக்குவத்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து சீராக சில மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்குள்ளாயினா். லாாியின் ஒயாில் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியிருக்கலாம் என்று காவல்துறையினா் தொிவித்துள்ளனா். இருப்பினும் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அடுத்த செய்தி