ஆப்நகரம்

திருப்பதி தரிசனத்தில் அதிரடி மாற்றம்; ஷாக்கான ஏழுமலையான் பக்தர்கள்!

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Oct 2020, 1:09 pm
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் திருப்பதி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து ஜூன் 10ஆம் தேதி பக்தர்கள் தரிசனம் தொடங்கியது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும், இலவச டோக்கன் பெற்றும் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். சாமி தரிசனம் செய்ய வருவோர் போதிய சரீர இடைவெளி விட்டும், முகக்கவசம் அணிந்தும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகம் முழுவதும் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
Samayam Tamil TTD Darshan


கொரோனாவிற்கு பின்னர் பக்தர்கள் வருகை மந்தமாக இருந்தது. படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் கடந்த 9ஆம் தேதி ஒரேநாளில் கோயில் உண்டியல் வசூல் ரூ.1.18 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது தேவஸ்தான நிர்வாகத்தை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ரூ.300 டிக்கெட் மூலம் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசன டிக்கெட்கள் தினசரி 3 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதனை வாங்க போதிய சரீர இடைவெளியின்றி நூற்றுக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். இது கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்று பயந்து தேவஸ்தான நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இலவச தரிசன டிக்கெட்கள் வரும் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

இமயமலையில் ஏழுமலையான் கொடுக்கும் சர்ப்ரைஸ்; ரெடியான திருப்பதி தேவஸ்தானம்!

இது பக்தர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விஷயம் தெரியாமல் வழக்கம்போல் திருப்பதி பூதேவி காம்ப்ளக்ஸ் கவுண்டருக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது அங்கு இலவச தரிசனம் கிடையாது என்று ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். மேலும் அங்குள்ள தேவஸ்தான அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயம் ரூ.300 டிக்கெட்டில் 3,000 டிக்கெட்கள் கூடுதலாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.300 டிக்கெட்டில் நாள்தோறும் 13 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். டிக்கெட் இல்லாமல் திருமலைக்கு வர வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி