ஆப்நகரம்

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: லட்டுடன் வரவேற்கும் தேவஸ்தானம்!

கனமழை காரணமாக தரிசனம் செய்ய முடியாமல் போன பக்தர்களுக்கு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

Samayam Tamil 23 Nov 2021, 8:16 am
வடகிழக்கு பருவமழை திருமலை திருப்பதியை புரட்டிப் போட்டுள்ளது. திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாகனங்கள், விலங்குகள் என பாரபட்சமின்றி தண்ணீரால் அடித்துச் செல்லப்படுகின்றன. திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டிருந்த பக்தர்கள் வெள்ளம் தொடர்பான வீடியோவை பார்த்து தங்களது பயணத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.
Samayam Tamil tirupati darshan


அத்தகைய பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் அறிவிக்கிறது. ஏழுமலையான் தரிசனத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்து, மழை காரணமாக திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கனமழை, வெள்ளத்துக்குப் பிறகு தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், திருமலை மலைப்பாதையிலும், அலிபிரி நடைபாதை மார்க்கத்திலும் பயணிக்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வானதிக்கு நேர்ந்த அவமானம்... உடனே அழைத்த ஸ்டாலின்
அதேநேரத்தில், நவம்பர் 18 முதல் 30ஆம் தேதி வரையிலான நாட்களில், ஏழுமலையான் தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து, திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்கு, மற்றொரு நாளில் தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவஸ்தானம் வழங்குகிறது. இதற்காக சிறப்பு மென்பொருளை உருவாக்க உள்ளது. அவர்கள், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இலவச சர்வ தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், வர்ச்சுவல் சேவை, ஸ்ரீவாணி அறக்கட்டளை சேவை உள்ளிட்டவற்றுக்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rains: மீண்டும் தமிழகத்தை நோக்கி வரும் புயல் சின்னம்?
மேலும், கடந்த சில நாட்களில், தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்கள், 30ஆம் தேதிக்குள் தரிசனத்திற்கு வந்தால், அவர்களை தரிசனத்திற்கு அனுமதித்து, லட்டு பிரசாதம் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 30ஆம் தேதிக்குப் பிறகு தரிசனத்திற்கு வருவதாக இருந்தால், புதிய மென்பொருள் உருவான பின்னர், அதன் வாயிலாக முன்பதிவு செய்து தான் வரவேண்டும் என்று தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி