ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்: துயர சம்பவம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரியான டாலர் சேஷாத்ரி மாரடைப்பால் உயிரிழந்தார்.

Samayam Tamil 30 Nov 2021, 9:06 am
திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய டாலர் சேஷாத்ரி நேற்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
Samayam Tamil ttd


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஏழுமலையான் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழாவும், கல்யாண உற்சவமும் நடைபெற இருந்தது.

இதில் பங்கேற்க திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரி டாலர் சேஷாத்ரி என்கிற பாலசேஷாத்ரி நவம்பர் 27ஆம் தேதி விசாகப்பட்டினம் சென்றார்.
மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
நேற்று அதிகாலை 4 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட தேவஸ்தான அதிகாரிகள், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அவர் உயிரிழந்தார்.

பாலசேஷாத்ரி எப்போதும் அதிக எடை கொண்ட டாலர் அணிந்து வந்ததால் அவரை டாலர் சேஷாத்ரி என அழைக்கப்பட்டார். அவரது விருப்பப்படியே ஏழுமலையான் பணியில் இருந்தபோதே உயிரிழந்துள்ளார். அவரது மரணம் ஏழுமலையான் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு: இந்த முறை அந்த தவறு நடக்காதாம்!
டாலர் சேஷாத்ரி மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முன்னாள் தேவஸ்தான செயல் அலுவலர்கள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி