ஆப்நகரம்

திருப்பதி போறீங்களா? விரைவு தரிசன டிக்கெட் எப்படி வாங்குவது? - இதோ விவரம்!

ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ஜூலை மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் பெறும் வசதி தேவஸ்தான இணையதளம் மூலம் இன்று வெளியிடப்படுகிறது.

Samayam Tamil 29 Jun 2020, 10:29 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இதன்மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கொட்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏழுமலையான் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Samayam Tamil Tirupati Special Entry Ticket


இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் சூழலில் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உரிய சுகாதார நடவடிக்கைகள் உடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெறும் 6 நாளில் 1.1 லட்சம் பேர் - இந்தியர்களை விடாமல் துரத்தும் கொரோனா!

இந்நிலையில் ஜூலை மாதத்தில் 300 ரூபாய்க்கான விரைவு தரிசன டிக்கெட்கள் இன்று காலை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. ஸ்லாட் வாரியாக தினசரி 9,000 டிக்கெட்களுக்கு மட்டும் முன்பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இதனை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சென்று பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் சர்வதரிசன நேரடி தரிசன ஒதுக்கீடு டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன.

இவை தினசரி 3,000 டோக்கன்கள் வீதம் சீனிவாசம், விஷ்ணுநிவாசம், பூதேவி காம்ப்ளக்சில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்களில் வழங்கப்பட உள்ளன. இந்த டோக்கன்களை ஒருநாள் முன்னதாக பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஊஞ்சலாடிய பிரதமர்கள்; ஊடுருவிய சீன ராணுவம் : ப.சிதம்பரம் கிண்டல் ட்வீட்

அதாவது ஜூலை ஒன்றாம் தேதி சர்வதரிசனத்திற்கு ஜூன் 30ஆம் தேதி காலை திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் டோக்கன்கள் பெறலாம். இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி