ஆப்நகரம்

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து பேசிய டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகாலாவை இன்று நேரில் சந்தித்தார்.

Samayam Tamil 29 Jun 2018, 2:12 pm
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகாலாவை இன்று நேரில் சந்தித்தார்.
Samayam Tamil 1d53cfaa-7ec5-4a06-bb41-99f4ac154971.
சசிகாலா உடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு


சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா.

இந்நிலையில் இன்று டிடிவி தினகரன், சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். தற்போதைய அரசியல் சூழல், சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்க வழக்கு ஆகியவற்றை குறித்து இருவரும் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

சசிகலா சிறை சென்ற பிறகு டிடிவி தினகரனுக்கும் அவருக்கு மனக்கசப்புகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஆர்.கே. இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றது, சசிகலாவிற்கு அவர் மேல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் சகோதரர் திவாகரன் மீது சமீபத்தில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா தற்போது டிடிவி தினகரனை முழுமையாக நம்பத்தொடங்கிவிட்டார் என்றும் தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பரபரப்பான அக்ரஹாரா சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேசிய போது, சசிகலா உதவியாளர் கார்த்திக், வழக்கறிஞர்கள் அசோகன் மற்றும் சுரேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி