ஆப்நகரம்

துருக்கியில் இந்திய வீரர்கள் தவிப்பு

துருக்கி: துருக்கியில் ராணுவக் கிளர்ச்சி நடைப்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில் உலக பள்ளிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற தமிழக மாணவர்கள் 10பேர் உட்பட இந்திய மாணவர்கள் 200 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.

TOI Contributor 16 Jul 2016, 2:07 pm
துருக்கி: துருக்கியில் ராணுவக் கிளர்ச்சி நடைப்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில் உலக பள்ளிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற தமிழக மாணவர்கள் 10பேர் உட்பட இந்திய மாணவர்கள் 200 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.
Samayam Tamil turkey crisis indian player
துருக்கியில் இந்திய வீரர்கள் தவிப்பு


துருக்கி நாட்டில் ராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த நாட்டில் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் துருக்கி நாட்டில் கடந்த 15ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது.தடகளம்,நீச்சல் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க்கச் சென்ற 10 தமிழக மாணவர்கள் உட்பட் 200 இந்திய மாணவர்கள் துருக்கி நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்த வீரர்கள் அனைவரும் துருக்கியிலுள்ள டிராப்சோன் விளையாட்டு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் அந்த கிராமத்தை விட்டு வேளியேற வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சிவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி