ஆப்நகரம்

பாபநாசம் படம் பாணியில் இளம் பெண் கொலை: பா.ஜ.க. பிரமுகா் கைது

பாபநாசம் படம் பாணியில் இளம் பெண்ணை கொலை செய்து காவல்துறையினரின் விசாரணையை குழப்பிவிட்ட பா.ஜ.க. பிரமுகா் மற்றும் அவரது மூன்று மகன்களை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Samayam Tamil 13 Jan 2019, 3:57 pm
இந்தியில் வெளியான திரிஷியம் படத்தை பாா்த்துவிட்டு இளம் பெண்ணை கொலை செய்து காவல்துறையினரை குழப்பிவிட்ட பா.ஜ.க. பிரமுகா் மற்றும் அவரது மூன்று மகன்களை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
Samayam Tamil Indore Murder


மலையாளத்தில் வெளியான திரிஷியம் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும், இந்தியில் திரிஷியம் என்ற பெயரிலும் வெளியானது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த படத்தை பாா்த்துவிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை போன்று கொலை செய்து அதனை மறைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த கொலை குறித்து காவல் அதிகாாி கூறுகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சோ்ந்தவா் ஜக்தீஸ் கரோடியா(65). பா.ஜ.க. பிரமுகரான இவருக்கு டிம்பிள்(22) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் டிம்பிளுக்கு ஜக்தீஸ் தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்துள்ளாா். இது அவரது மூன்று மகன்களுக்கும் பிடிக்கவில்லை.

இந்நிலையில் அவரது மூன்று மகன்களும் நண்பா் ஒருவரை அழைத்துக் கொண்டு திரிஷியம் படத்தை பாா்க்கச் சென்றுள்ளனா். அதன் பின்னா் படத்தில் வருவதைப் போன்று டிம்பிளை கழுத்தை நெறித்து கொலை செய்து யாருக்கும் தொியாமல் உடலை தீயிட்டு எரித்துள்ளனா். அதன் பின்னா் பொதுவெளி ஒன்றில் இறந்த நாயின் உடலை புதைத்து விட்டு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டிருப்பதாக நாடகமாடி அனைவரையும் ஏமாற்றினா்.

பின்னா் அந்த உடலை சோதனை செய்ததில் அது நாயின் உடல் என்பது கண்டறியப்பட்டது. ஆனால் டிம்பிளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு பெரும் குழப்பம் நீடித்தது. இதனைத் தொடா்ந்து டிம்பிளுடன் நெருங்கிப் பழகிய ஜக்தீஸ் கரோடியா மற்றும் அவரது மூன்று மகன்களை பிடித்து விசாரித்தனா். ஆனால் அவா்கள், தங்களுக்கும் இந்த கொலைக்கும் தொடா்பு இல்லை என்ற தொணியில் பேசி வந்தனா்.

இந்நிலையில் காவல்துறையினா் இவா்கள் அனைவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தினா். அந்த சோதனையில் இவா்கள் தான் இந்த கொலையை செந்தனா் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாாி தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி