ஆப்நகரம்

வதந்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகள் முடக்கம்.! ட்விட்டர் அதிரடி

போலி தகவல்களை கொண்டு வதந்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் முடங்கியுள்ளது.

Samayam Tamil 20 Sep 2019, 5:50 pm
சமூகவலைத்தளத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது ட்விட்டர். உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் வாசிகள் வரை ட்விட்டரானது முக்கிய பயன்பாட்டு வலைத்தளமாக உள்ளது. சிலநேரங்களில் இதில் பதிவிடப்படும் குறுஞ்செய்தி கூட ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறும்.
Samayam Tamil 4


ட்விட்டரில் சமீப காலமாக வன்முறையை தூண்டும் வகையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பல்வேறு கணக்குகளில் இருந்து பதிவிடப்பட்டு வந்துள்ளது. இந்த செய்தியை போலி என தெரியாத நெட்டிசன்கள் அது குறித்து மீம்ஸ், ட்ரோல் ஆகியவற்றை போடுகின்றனர். நடக்காத ஒரு செய்திக்கு இணைய போரும் ஏற்படுகிறது.

சமீபத்தில் காஷ்மீரின் மாநில அங்கீகாரத்தை இந்தியா நீக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து கடுமையான விமர்சனங்களால் சாடி வருகிறது. இந்நிலையில் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஆகியவற்றை ட்விட்டரில் பதிவிட்ட சிலர், இந்தியா நடத்திய துப்பாக்கி சூட்டில் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை பாருங்கள் என இருந்தது.

இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஆராய்ந்ததில் அவைகள் அனைத்தும் சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் புகைப்படங்கள் என தெரிந்தது. இதனையடுத்து நாட்டிற்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என புகார்கள் எழுந்தது. இதனையொட்டி தற்போது ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் முடங்கியுள்ளது.

அடுத்த செய்தி