ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 1 Apr 2018, 3:56 pm
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil indian-army-china-doklam-xl_100417105511


ஜம்மு காஷ்மீரின் சோபியான், அனந்த்நாக் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை முதலே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் அனந்த்நாக் பகுதியில் 7 பயங்கரவாதிகளும் சோபியானில் பகுதியில் ஒரு பயங்கரவாதியும் உட்பட 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சோபியானின் தர்காக்கில் ஒரு பயங்கரவாதியை உயிருடன் பிடித்துள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இரண்டு பேர் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் உமர் பயாஸைக் கொன்றவர்கள்.

இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சோபியானில் ஒருவரும் கச்தூராவில் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளனர். பொதுமக்களும் 31 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சில் காயம் அடைந்துள்ளனர்.
மேலும் பல பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

அடுத்த செய்தி