ஆப்நகரம்

திருப்பதி திருமலையில் அவ்வப்போது நடக்கும் அதிசயங்கள்..! இன்று வந்த அறிய விருந்தினர்...

ஊரடங்கு விளைவாக பக்தர்கள் வருகையின்றி காணப்படும் திருப்பதி திருமலையில் வன விலங்குகளின் வருகை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 26 May 2020, 9:13 pm
ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி எந்தவித வாகனங்களையும் மலைப்பாதைகளில் அனுமதிக்கவில்லை.
Samayam Tamil திருப்பதி திருமலையில் வன விலங்குகளின் வருகை அதிகரித்துள்ளது


தொடர்ந்து 60 நாட்களாக மலைப்பாதை 1,2 ல் எந்த வாகனங்களும் வராததால் சாலைகள் எந்தவித சத்தமில்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்நிலையில், சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள பல்வேறு வனவிலங்குகள் மலைப்பாதையில் நடமாடுகின்றன. புள்ளி மான்கள், மான்கள், கரடி, பாம்பு, சிறுத்தை உட்பட பல வன விலங்குகள் மலைப்பாதை சாலைகளில் வந்து கொண்டிருக்கின்றன.


தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் பூனை வகையில் அறிய வகையாக காணப்படும் தேவாங்கு ஒன்று மலைப்பாதையில் காணப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அவற்றை பிடித்து மீண்டும் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் விட்டுவிட்டனர். அரிய வகையான இந்தப் பூனைகள் மற்றொருமுறை காணப்பட்டால் அவற்றை வனவிலங்கு பூங்காவில் பார்வைக்காக வைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் கூறினர்.

அடுத்த செய்தி