ஆப்நகரம்

மீண்டும் அவதாரம் எடுத்த ‘அபிநந்தன்’ - புதிதாக பிறந்த இரு குழந்தைகளுக்கு பெயர் சூட்டல்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் அபிநந்தன் பெயர், புதிதாக பிறந்து குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 2 Mar 2019, 5:16 pm
உத்தரப்பிரதேச மாநிலம் நிஹல்பூரைச் சேர்ந்தவர் விம்லேஷ் பெந்தாரா(26). இவர் கடந்த சில நாட்களாக அபிநந்தன் குறித்த செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வந்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த பதற்றத்திற்கு அபிநந்தனும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் கர்ப்பிணியான விம்லேஷ், பிரசவ வலி ஏற்பட்டு கடந்த வியாழன் மாலை ஜெய்ப்பூரில் உள்ள மகிளா சிகித்சாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil Abinandhan Baby


இதைத் தொடர்ந்து வெள்ளி மாலை 3.30 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தனது கணவர், குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து பிறந்த குழந்தைக்கு ‘அபிநந்தன்’ என்று பெயரிட்டுள்ளனர். இதேபோல் நீலம் திக்கிவால், அவரது கணவர் ரவி திக்கிவால் மற்றும் சில குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கு ‘அபிநந்தன்’ பெயரை சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய விம்லேஷ், தனக்கு குழந்தை பிறக்கும் முன்பாகவே ஒருவேளை மகன் பிறந்தால், ‘அபிநந்தன்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ‘அபிநந்தன்’ திரும்பி வந்ததையும், எனக்கு மகன் பிறந்ததையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். உண்மையான ‘அபிநந்தன்’ போன்று, எனது மகனும் நல்ல பெயரை பெற்றுத் தருவான் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இதேபோன்ற சிந்தனையில் சங்கனேரைச் சேர்ந்த திக்கிவால் குடும்பத்தாரும் இருந்துள்ளனர். கடந்த வெள்ளி அன்று இரவு 11.30 மணியளவில் நீலம் திக்கிவாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அடுத்த நாள் காலையில் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் ‘அபிநந்தன்’ நாடு திரும்பிய செய்தியைப் பார்த்துள்ளனர்.

அவர் எப்படி நாட்டிற்கு பெருமை தேடித் தந்தாரோ, அதேபோல் தனது மகனும் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். எனவே தங்கள் குழந்தைக்கு ‘அபிநந்தன்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். பின்னாளில் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு, ‘அபிநந்தனின்’ வீர வரலாற்றைக் கூறி அவனை மிகுந்த ஊக்கப்படுத்துவோம் என்று கூறினர்.

அடுத்த செய்தி