ஆப்நகரம்

உலுக்கி எடுத்த இடி, மின்னல்; நடுவானில் ஆட்டம் கண்ட விமானம்- அடுத்த நடந்த அதிர்ச்சி!

ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆட்டம் கண்ட விஷயம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Sep 2019, 1:03 pm
ஏ.ஐ-467 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம், கடந்த 17ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து விஜயவாடாவிற்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக வானில் இடி, மின்னல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil AI


இது விமானத்தை திடீரென தாக்கியது. இதன் காரணமாக விமானத்தின் சில பகுதிகள் சேதமாகின. அதேசமயம் பயணிகளின் பொருட்களும் சரிந்து விமானத்திற்குள் விழுந்தன.

உங்க மகளுக்கு மறக்காம விஷ் பண்ணிருங்க- மகள்களைக் கொண்டாடி மகிழும் அற்புதமான நாள்!

ஆனால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தின் கேபின் குழுவினருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விமான பாதுகாப்புத்துறைக்கு உரிய தகவல் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆணுறை இல்லையென்றால் அபராதம்.! இது என்னப்பா புது சட்டம்..

இதேபோல் மற்றொரு ஏர் இந்தியா விமானம் ஏ.ஐ-048 பாதிக்கப்பட்டுள்ளது. இது டெல்லியில் இருந்து கொச்சின் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, இடி, மின்னல் தாக்கி உள்ளது.

இதனால் உடனே விமான பாதுகாப்புத் துறைக்கு விமானி தகவல் தெரிவித்துள்ளார். விமான கேபின் ஊழியர்களுக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கொச்சின் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன், 4 மணி நேரம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

காதலர்களுக்கு மட்டுமல்ல மோடிக்கும் அதிருஷ்ட இடம் கோவா!!

இந்த இரு சம்பவங்கள் குறித்தும், ஏர் இந்தியா நிறுவனம் விசாரித்து வருகிறது. முழுமையான ஆய்விற்கு பின்னரே, மீண்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி