ஆப்நகரம்

கேரளாவில் போடோ பயங்கரவாதிகள் 2 பேர் கைது

கேரளாவில் தலைமறைவாக இருந்த போடோ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.

TNN 23 Jun 2016, 10:42 pm
கேரளாவில் தலைமறைவாக இருந்த போடோ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil two militants arrested in kerala
கேரளாவில் போடோ பயங்கரவாதிகள் 2 பேர் கைது


அசாம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து போடோலாந்து என தனி மாநிலம் ஏற்படுத்தக் கோரி, போடோ பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போடோ அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள 2 பேரை கேரளப் போலீசார் இன்று கைது செய்தனர். கொல்லத்தில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பலர் படிக்கவும், வேலை தேடியும் தென்மாநிலங்களுக்கு வருவது அதிகரித்துள்ளது. அதேபோல, இவர்களும் தப்பி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி