ஆப்நகரம்

இரண்டு மாத குழந்தைக்கு ஆசிட்குடிக்க வைத்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

இரண்டு மாத குழந்தைக்கு ஆசிட் குடிக்க வைத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

TOI Contributor 28 Jan 2017, 4:52 pm
புதுடெல்லி : இரண்டு மாத குழந்தைக்கு ஆசிட் குடிக்க வைத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil two month old girl force fed acidic liquid
இரண்டு மாத குழந்தைக்கு ஆசிட்குடிக்க வைத்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


டெல்லியின் துக்லாகாபாத் எக்ஸ்டன்ஷன் பகுதியை சேர்ந்தவர் நஸ்ரின். இவரது கணவர் ஒகாலா டெய்லராக வேலைப்பார்க்கின்றார். கணவர் வேலைக்கு சென்றபின் தனது 2மாத கைக்குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் வீட்டில் தனிமையில் இருப்பார் நஸ்ரின்.

சம்பவத்தன்று காய்கறி வாங்க வீட்டிலிருந்து 2வயது குழந்தையை மட்டும் அழைத்து சென்ற நஸ்ரின் 15 நிமிடம் கழித்து திரும்ப வந்து பார்த்த போது, 2 மாத குழந்தையின் வாயில் நுரையுடன் வெந்து போய் அழுது கொண்டிருந்தது.

அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைக்குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு யாரோ பினைல் அல்லது ஆபத்தான ஆசிட் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

5 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நிலை தேறியுள்ளது கைக்குழந்தை. இதையடுத்து காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. யார் குழந்தைக்கு ஆசிட் கொடுத்தது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி