ஆப்நகரம்

Pulwama Encounter: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 18 Feb 2019, 11:51 am
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
Samayam Tamil fire3


கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தியதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த சம்பவத்திலிருந்து மீள்வதற்குள் புல்வாமா மாவட்டத்தில் மற்றொர் தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா மாவட்டத்தின் பின்க்லான் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் என்கவுண்டர் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில், மேஜர் ராணுவ அதிகாரி விஎஸ் தவுண்டியால் உள்பட 4 வீரர்கள் ஹவல்தார் ஷே ராம், அஜய் குமார், மற்றும் ஹரி சிங் ஆகியோர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதில், வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவரும் 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில், பல மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காலி ரஷீத் மற்றும் கம்ரான் என்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவரும் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் ஒருவர் இந்த தாக்குதலில் தொடர்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி