ஆப்நகரம்

ரயிலில் அடிபட்ட இரண்டு புலிக்குட்டிகள் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு புலிக்குட்டிகள் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

Samayam Tamil 15 Nov 2018, 2:26 pm
மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு புலிக்குட்டிகள் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன.
Samayam Tamil tiger-cubs


மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் ஜுனோனா வனப்பகுதி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை இரண்டு புலிக்குட்டிகள் இறந்துகிடந்தன. அதனை அறிந்து வனத்துறையினர் வந்து புலிகள் இறந்துவிட்டதை உறுதிசெய்தனர்.

இறந்த புலிக்குட்டிகள் இரண்டும் பிறந்து 8 முதல் 10 மாதங்களே ஆனவை என்று வனத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். சந்திராபூர் - கோண்டியா ரயிலில் இவை அடிப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் 14 மனிதர்களைக் கொன்ற அவ்னி என்ற புலி அண்மையில் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்