ஆப்நகரம்

சபரிமலையில் பெண் பக்தர்களால் மீண்டும் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்ய முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 16 Jan 2019, 10:13 am
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று இரண்டு பெண்கள் தரிசனம் செய்ய முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil sabarimala


கேரளா மாநிலத்தின் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா மற்றும் ஷானிலா ஆகிய இரு பெண்கள் இன்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால், அந்த பெண்களை நீலமலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் ஆண்களைப் போல வேடமணிந்து சாமி தரிசனம் செய்ய முயன்றதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து போலீஸார் அவர்களை பாதுகாப்புடன் பம்பைக்கு திரும்பி அழைத்து சென்றனர். முன்னதாக கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இருவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்து வரலாற்றை மாற்றி அமைத்தனர்.

அடுத்த செய்தி