ஆப்நகரம்

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி..! பெரும்பான்மையை மிஞ்சிய ஆதரவு...

மகாராஷ்டிராவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல். ஏ க்களின் ஆதரவை பெற்று உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றுள்ளது.

Samayam Tamil 30 Nov 2019, 3:32 pm
மஹாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களையும், அதோடு கூட்டணி அமைத்த சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றியது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், அதோடு கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் கைப்பற்றியது.
Samayam Tamil மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி..! பெரும்பான்மையை மிஞ்சிய ஆதரவு...


இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை பாஜகவுக்கு விட்டு தர மறுத்த சிவசேனா பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. இதனால் மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவிக்கப்பட்டார். ஆனால் பதவியேற்பு முன்பே தேசியவாத காங்கிரசிலிருந்து அஜித் பவார் விலகி பாஜக கட்சியில் இணைந்தது உச்ச கட்ட அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

எதிர்பாராமல் முதல்வராகி விட்டேன்: உத்தவ் தாக்கரே

அதன் விளைவாக மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸூம், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் பெருன்பான்மை எம்எல்ஏ க்கள் தங்கள் வசம் இருக்க பாஜக ஆட்சி அமைத்துள்ளது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும், ஆட்சி மாற்றம் செல்லாது எனவும் தேசியவாத காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் அஜித் பவார், பட்னாவிஸ் இருவரும் குளறுபடிக்கு மத்தியில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதன் பிறகு மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு கோரினர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 169 எம்எல்ஏ க்களின் ஆதரவை பெற்று உத்தவ் தாக்கரே அரசு ஆட்சி அமைத்துள்ளது.

பாஜகவுக்கு அடுத்த அக்னிப் பரீட்சை... ஜார்க்கண்டில் நாளை தொடங்குகிறது தேர்தல்!!

முன்னதாக பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கிய போது பாஜக உள்ளிட்ட கட்சி எம்எல்ஏ க்கள் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகரை நியமித்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரி பாஜக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி