ஆப்நகரம்

கல்லூரிகள் திறப்பு: யுஜிசி முக்கிய உத்தரவு!

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டி உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 16 Jun 2022, 12:21 pm
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, செமஸ்டர் தேர்வுகள் முடிந்து நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்து விரைவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
Samayam Tamil யுஜிசி முக்கிய உத்தரவு
யுஜிசி முக்கிய உத்தரவு


இந்த நிலையில், பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டி உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. உயர்மட்ட கமிட்டியை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது எனவும், கமிட்டி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு: ஜூலை 22 மீண்டும் விசாரணை!
ஆசிரியைகள், மாணவிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் இதை செயல்படுத்தவில்லை என்ற புகார் வந்ததன் காரணமாக மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி