ஆப்நகரம்

இல்ல... நாங்க எக்ஸாம் நடத்தியே தீருவோம்... அடம்பிடிக்கும் பல்கலைக்கழகங்கள்!!

நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று கூறியுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jul 2020, 7:08 pm
கொரோனா பரலல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் (செமஸ்டர்), ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
Samayam Tamil exam


இதையடுத்து, 'நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளை ரத்து செய்யலாம் என்றும், இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மாணவர்களின் கருத்துக்களை அறிந்து முடிவு செய்யலாம்' என்று யுசிஜி அமைத்த நிபுணர் குழு அண்மையில் பரி்ந்துரைத்திருந்தது.

இந்த பரிந்துரையின்படி கல்லூரி முதலாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. தமிழக அரசும் இதுதொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: செமஸ்டர் தேர்வு இல்லை!

இந்த நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்களிடமிருந்தும் யுசிஜி கருத்து கேட்டிருந்தது.

அதற்கு, 'நாட்டில் மொத்தமுள்ள 818 பல்கலைக்கழகங்களில், 603 பல்கலைக்கழகங்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை ஏற்கெனவே நடத்திவிட்டதாகவோ அல்லது இனிமேல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவோ கூறியுள்ளன' என்று யுசிஜி தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

31 மாணவர்கள் வழக்கு: இதனிடையே, ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக யுசிஜி அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராகவும், இத்தேர்வுகளை ரத்து செய்யக் கோரியும் 31 மாணவர்கள் தொடுத்துள்ள வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி