ஆப்நகரம்

முகத்தை அப்டேட் செய்ய ஆதார் ஆணையம் முடிவு

ஆதார் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து ஆதார் அட்டைதாரர்ரகளின் முகத்தையும் அடையாளச் சான்றாக ஸ்கேன் செய்ய ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 15 Jan 2018, 4:03 pm
ஆதார் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து ஆதார் அட்டைதாரர்ரகளின் முகத்தையும் அடையாளச் சான்றாக ஸ்கேன் செய்ய ஆதார் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil uidai to introduce facial authentication for aadhaar
முகத்தை அப்டேட் செய்ய ஆதார் ஆணையம் முடிவு


‘தி டிரிபியூன் இந்தியா’ வெளியிட்ட ஆதார் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ஆய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து ஆதார் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆதார் தரவுகளை கையாளும் அதிகாரம் பெற்ற 5000க்கும் அதிகமான அதிகாரிகளிடம் இருந்து அந்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆதார் கைரேகை சான்றில் பிரச்னை இருப்பதாக குவிந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவரின் முகத்தையும் கூடுதல் அடையாளச் சான்றாக பதிவுசெய்யப்போவதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பணி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தை பதிவுசெய்யும் போதும் கைரேகை, கண்மணி அல்லது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி (OTP) பாஸ்வேர்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி சரிபார்க்கப்படும்.

அடுத்த செய்தி