ஆப்நகரம்

இந்தியாவுக்கு வர முடியாது ஸாரி: இங்கிலாந்து பிரதமர் வருத்தம்!

பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட இங்கிலாந்து பிரதமர் திட்டமிட்டப்படி இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்

Samayam Tamil 5 Jan 2021, 6:17 pm
நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தின விழா வருகிற ஜனவரி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
Samayam Tamil போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்


அந்த வகையில், 2021ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்றுக் கொண்ட அவர் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வர உள்ளார் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஏற்கெனவே பரவி வரும் வைரஸை விட வேகமாக பரவக்கூடிய மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் உருமாறிய கொரோனா: 7 நாட்களில் இத்தனை பேர் பாதிப்பா!

வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இங்கிலாந்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட இங்கிலாந்து பிரதமர் திட்டமிட்டப்படி இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை பிரதமர் மோடியை தொடர்பு கொண்ட போரிஸ் ஜான்சன், திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு செல்ல முடியாது என்று தனது வருத்தத்தை தெரிவித்ததாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி