ஆப்நகரம்

வேலை இல்லாதவருக்கு நிதியுதவி; அதிரடி காட்டும் டி.ஆர்.எஸ் தேர்தல் அறிக்கை!

ஐதராபாத்: வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி, தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தேர்தல் அறிக்கை தயாராகி உள்ளது.

Samayam Tamil 13 Oct 2018, 11:03 pm
தெலுங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபை கலைக்கப்பட்டது. இதையடுத்து வரும் டிசம்பர் 7ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தெலுங்கானா ராஷ்டிரா சமிதி கட்சி வாக்காளர்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.
Samayam Tamil TRS CM


வேலை இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஐ.டி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ், வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான நலத்திட்டங்களுக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது.

இதற்காக 43% அளவிற்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும். வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசு பணியிடங்களை நிரப்புவதோடு, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு வழிவகுக்கப்படும். வேலையின்றி தவிப்பவர்களுக்கு உரிய நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த திட்டத்தில் நிதி அதிகரிக்கப்படும் என்று சந்திரசேகர ராவ் கூறியதைச் சுட்டிக் காட்டினார். தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விரைவில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.

Unemployment dole and other welfare measures in TRS manifesto.

அடுத்த செய்தி