ஆப்நகரம்

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்: நேரடியாக களத்தில் இறங்கிய பிரதமர் மோடி

பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது

Samayam Tamil 9 Jan 2020, 8:48 pm
டெல்லி: நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியே நேரடியாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியகியுள்ளன.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை செய்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

கோட்டையில் ஆட்டம் கண்ட பாஜக; மண்ணைக் கவ்விய நிதின், பட்நாவிஸ்!

பட்ஜெட் தொடர்பான பணிகளை வழக்கமாக பிரதமர் அலுவலகம் மேற்பார்வையிடுவது வழக்கம். ஆனால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், பட்ஜெட் தொடர்பான பணிகளை பிரதமர் மோடியை நேரடியாக கவனித்து வருவதாஅ பிரதமர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட பலருடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

மேலும் மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “130 கோடி இந்தியர்களின் விருப்பங்களையும், இந்தியாவின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக மத்திய பட்ஜெட் இருக்கும். பட்ஜெட் குறித்து உங்கள் யோசனைகளையும், பரிந்துரைகளையும் MyGov எனும் இணையதளம் மற்றும் ஆப்-ல் பகிர்ந்து கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

பிரதமருக்கே கொலை மிரட்டலா? -இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்!

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக பொருளாதார வீழ்ச்சி குறித்து பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றவகையில் உற்பத்தி துறைகளின் வீழ்ச்சி, உணவு பொருட்களின் விலையேற்றம், தனிநபர் வாங்கும் திறன் உள்ளிட்டவைகள் அரங்கேறி வருகின்றன. வங்கித் துறையும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

நாற்காலி சண்டை: மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பு!

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதை விட மோசமாக 4.5 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி வீழ்ந்துள்ளது. அத்துடன், அக்டோபர் - டிசம்பர் காலாண்டிலும், இந்த முழு நிதியாண்டிலும் 5 சதவீத வளர்ச்சிகூட இருக்காதென்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் தங்களது ஆய்வுகளில் எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி