ஆப்நகரம்

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு; அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2018, 2:37 pm
டெல்லி: குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil Ordinance
மத்திய அமைச்சரவை


காஷ்மீரில் கத்துவா, உத்தரப் பிரதேசம் உன்னாவ் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதற்கு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் சிறப்பு குழுக்கள் அமைத்து விரைந்து செயல்படுமாறு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தினார்.

மைனரை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என தற்போதைய சட்டங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் தற்போதைய போக்சோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இயலும்.

Union Cabinet approves death sentence to sexual assault under 12 year old.

அடுத்த செய்தி