ஆப்நகரம்

இனி ஸ்காலர்ஷிப் பணம் நேரடியாக அனுப்பப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!

பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குக்கே ஸ்காலர்ஷிப் பணத்தை அனுப்ப மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

Samayam Tamil 23 Dec 2020, 11:44 pm
பட்டியல் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக ஸ்காலர்ஷிப் பணத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil Modi


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பட்டியல் வகுப்பு மாணவர்களின் கல்விக்காக ஸ்காலர்ஷிப் பட்ஜெட்டை ஐந்து மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் 10000 ரூபாய், இலவச ஸ்மார்ட்போன்: அரசு அதிரடி அறிவிப்பு!
பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டம் எளிமைப்படுத்தப்பட்டு மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக பணத்தை அனுப்ப அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஸ்காலர்ஷிப்பில் மத்திய அரசின் பங்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்காலர்ஷிப் பணத்தில் மத்திய அரசு 60 விழுக்காட்டையும், மாநில அரசு 40 விழுக்காட்டையும் வழங்கும் என மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி பட்டியல் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் பல்வேறு முக்கிய மற்றும் திருத்த மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷுக்காக 8ஆவது முறையாக இணையும் செல்வராகவன் - யுவன்
இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில், “அமைச்சரவையில் இன்று எடுக்கப்பட்ட முடிவு பட்டியல் வகுப்பு சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் கல்விக்கு பெரிதும் உதவும். நமது இளைஞர்களுக்கு உயர்தர, குறைந்த செலவிலான கல்வியை வழங்குவது அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி