ஆப்நகரம்

இரு மாதங்களுக்கு ரேஷன் இலவசம்: அடுத்து அந்த அறிவிப்பு தானா?

ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் ரேஷன் கடைகளில் இலவசமாக உணவுப் பொருள்கள் கிடைக்கும் வகையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 May 2021, 7:25 am
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் எப்போது அமல்படுத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
Samayam Tamil RATION food


பாதிப்புகளைப் பொறுத்து மாநில அரசுகளே ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. பல இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு - எப்போது அறிவிப்பார் மோடி?
இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூன்றாம்கட்டத்தின் கீழ் 79.88 கோடி பேருக்கு தலா ஐந்து கிலோ உணவு பொருட்களை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான, கோதுமை அல்லது அரிசி ஒதுக்கீட்டு அளவை உணவு மற்றும் பொது விநியோகத்துறை தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டுக்கு 10,000 ரூ நிவாரணம்: ஸ்டாலின் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன?
நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்கள் என்ற கால அளவு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட உள்ள உணவு தானியங்களின் உத்தேச அளவு 80 லட்சம் டன் ஆகும். இதற்கான மானியச்செலவு ரூ.25,332.92 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி தகவல்களை மத்திய அரசு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

தற்போது இரண்டு மாதங்களுக்கு மத்திய அரசு இந்த உணவுப் பொருள்களை வழங்குவதாக கூறியுள்ள நிலையில் இதைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிப்பை வெளியிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த செய்தி