ஆப்நகரம்

பிரதமர் தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jun 2021, 4:29 pm

ஹைலைட்ஸ்:

  • நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை
  • கொரோனா இரண்டாம் அலை, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க வாய்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Modi SHAh
மோடி - ஷா
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை, கொரோனா மூன்றாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசிப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறோம்: குப்கர் கூட்டணி
குறிப்பாக, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுடன், ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி