ஆப்நகரம்

கல்வி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி: மீண்டும் தொற்றிய கொரோனா?

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கொரோனா அறிகுறிகளுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 1 Jun 2021, 1:13 pm
மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக வீடு திரும்பி பின்னர் தனது பணிகளை மேற்கொண்டு வந்தார்.
Samayam Tamil pokhriyal


இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: முதல்வர் சொன்ன குட் நியூஸ்!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த பணிகளில் கல்வி அமைச்சர் கவனம் செலுத்தி வந்தார். இது தொடர்பாக இன்று அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாக இருந்தது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் அவரது அறிவிப்பை எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிகள் திறப்பு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!
அவர் விரைவில் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வேண்டி பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி