ஆப்நகரம்

2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவிப்புகள் இதோ!

டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Samayam Tamil 15 Jun 2019, 8:44 pm
கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து நாடு திரும்பிய அவர், டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
Samayam Tamil NITI aayog meeting


இதில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரும் 2024ஆம் ஆண்டு இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வேண்டும்.

இதுவொரு சவால் நிறைந்த விஷயம். இருப்பினும் நம்மால் சாதிக்க முடியும். இதற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பாஜகவினருக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் உழைக்க வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சியில் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும். வறுமை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி, வெள்ளம், மாசுபாடு, ஊழல், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த செயல்பாட்டை அளிக்க வேண்டும்.

ஸ்வச் பாரத் அபியான், பிரதமர் ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பால் செய்து முடிக்கப்பட வேண்டும். வறட்சியை சமாளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வரும் 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்.

மீன் வளம், விலங்குகள் நலன், தோட்ட மேலாண்மை, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை வரும் 2022ஆம் ஆண்டிற்குள் செய்து முடிக்க வேண்டிய பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன.

வரும் 2025ஆம் ஆண்டிற்குள் எலும்புறுக்கி நோய் முற்றிலுமாக களையப்பட வேண்டும் என்று மோடி கூறினார்.

அடுத்த செய்தி