ஆப்நகரம்

பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது.. கவுரவித்த மத்திய அரசு!

பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.

Samayam Tamil 25 Jan 2022, 8:52 pm
நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Bipin Rawat


மேலும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக மகாராஷ்டிரத்தை சேர்ந்த பிரபா அத்ரே, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ராதேஷ்யாம் கெம்கா ஆகியோருக்கும் பத்ம விபூஷண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் முப்படைத் தளபதியான பிபின் ராவத் உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத்தும், அவரது மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்றைய பாதிப்பு நிலவரம்!
இந்நிலையில், பிபின் ராவத்தை கவுரவிக்கும் வகையில் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்ய நாடெல்லா, கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குநர் சைரஸ் பூனாவாலா, பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் வீரர்கள் நீரஜ் சோப்ரா, பிரமோத் பகத், வந்தனா கத்தாரியா, பாடகர் சோனு நிகாம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி